அப்போது வாணிவிலாசபுரம் காலனியிலிருந்து எம்சான்ட் நிரப்பிக் கொண்டு சென்ற டிராக்டர், முன்னால் சென்ற தியாகராஜன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவன் தியாகராஜனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவனை மாற்றினர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் தியாகராஜன் நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து பொதட்டூர்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.