சென்னை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் செப்டிக் டேங்க் குழி தோண்டியபோது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சீத்தூரணியைச் சேர்ந்த ராமையா (50), திருவுடையார்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (50) ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.