இந்தநிலையில் பகல் 11.40 மணிக்கு படகு போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டது. அதன் பிறகு யாரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே இன்று காலை படகில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மட்டும் உடனடியாக விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகில் அழைத்து வரப்பட்டனர். பெரும் குழப்பத்தில் சுற்றுலா பயணிகள் இருந்து வந்த நிலையில் தற்போது விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.