தமிழக-கர்நாடகா மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப் பகுதிகளையும், அதன் நடுவில் வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனர். மேலும் ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டியிலும் அலைமோதல்
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் கடந்த 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடந்த மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். மலர் கண்காட்சி நேற்று முன்தினமே நிறைவடைந்த போதிலும், நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டனர். அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.