மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் ஏராளமான திரண்டிருந்தனர். ஏரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் நேற்று காலை முதல் மாலை வரை இதமான சூழல் நிலவியது. கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் இரண்டாம் சீசன் காலத்தில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை ரசித்துச் சென்றனர்.