காலை நேரம் என்பதால் பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அலறி கூச்சலிட்டனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் மற்றொரு சுற்றுலா பஸ்சில் வந்தவர்கள், பஸ் இடிபாடுகளில் சிக்கிய மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர். இந்த விபத்தில் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் என 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.