ஊட்டி: தெலங்கானா மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் சிலர் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். 2 நாட்கள் ஊட்டியில் பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்த, அவர்கள் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தெலங்கானா செல்வதற்காக ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். பர்லியார் அருகே ஒரு வளைவில் சென்றபோது பஸ் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்ற ஸ்கூட்டர் பஸ்சின் அடியில் சிக்கியது. இதில் ஸ்கூட்டரில் வந்த சையத் அலி (42), அவரது மனைவி ஜமத் அஸ்மா (38) ஆகியோர் நசுங்கி பலியாகினர்.