ஈரோடு: வேப்பம்பாளையத்தில் உள்ள கல்லூரியில் இருந்து சுற்றுலா புறப்பட்ட பேருந்து கவிழ்ந்த விபத்தில் மாணவி உயிரிழந்தார். கல்லூரியில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் பேருந்து சென்றபோது வளைவில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மாணவி ஸ்வேதாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவி உறவினர்களுடன் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.