மும்பை: மகாராஷ்ராவில் சுங்க வரித் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் மாயங்க் சிங்(38). இவர் நவிமும்பை தலோஜா அருகே உள்ள ஒரு குளத்தில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு உயர் அதிகாரிகளின் தொல்லைதான் காரணம் என அவர் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக நவிமும்பை போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாயங்க் சிங் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரது வீட்டில் சமீபத்தில் சிபிஐ சோதனை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.