இதற்கிடையே கோபிகிருஷ்ணன் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது மனைவியிடம் பணம் கொடுத்தவர்கள் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். பின் இருவரும் படுத்து தூங்கி விட்டனர். அதிகாலை 3.30 மணி அளவில் கோபிகிருஷ்ணனின் மனைவி எழுந்து பார்த்தபோது கணவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அறை திறந்திருந்ததால் அங்கு சென்று பார்த்த போது கோபிகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.