இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை அழிக்கும் பணியில் குன்றத்தூர் போலீசார் நேற்று ஈடுபட்டனர். அதன்படி, குன்றத்தூர் பகுதியில் உள்ள காலி இடத்தில் பள்ளம் தோண்டி அதில் பறிமுதல் செய்யப்பட்ட 23 டன் குட்காவை பள்ளம் தோண்டி கொட்டி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில், தீ வைத்து எரித்தனர்.