அரக்கோணம்: அரக்கோணத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் ரயிலில் அரிசி கடத்தப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலை அடுத்து ரயில்வே பாதுகாப்பு படை, காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரேசன் அரிசி சிக்கியது