பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 11 ரயில்கள் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 11 ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நாளை சென்ட்ரலுக்கு வரவேண்டிய ஆலப்புழா தன்பாத் விரைவு ரயில் பெரம்பூரில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரலுக்கு வரவேண்டிய கொச்சுவேலி, கோரக்பூர் விரைவு ரயில்களும் பெரம்பூரில் நிறுத்தப்படும்.
மேலும், நாளை மறுநாள் சென்னை சென்ட்ரல் வரவேண்டிய ஏற்காடு விரைவு ரயில் ஆவடி வரை இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் -பெங்களூரு இடையே இயக்கப்படும் அதிகவேக ரயில் ஆவடி வரை இயக்கப்படுகிறது. நாளை மறுநாள் சென்னை சென்ட்ரல் வர வேண்டிய ஆலப்புழா விரைவு ரயில் திருவள்ளூர் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு