இனி வரும் மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் பதுக்கல்களும் தொடங்கிவிட்டன. இதன் காரணமாக சந்தையில் கோதுமை விலை எகிற தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு கோதுமை விலை உயர்ந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தோர் சந்தையில் மொத்த விலை கிலோவுக்கு 28 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. வட இந்திய மக்களின் முக்கிய உணவு பொருளான கோதுமை விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள மக்கள், கோதுமை விலையை கட்டுப்படுத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளன. விலை குறைய கோதுமை மீதான இறக்குமதி வரியை 40%ல் இருந்து குறைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.