தக்காளியை தொடர்ந்து கோதுமை விலையும் அதிகரிப்பு… ஒன்றிய அரசுக்கு பெரும் தலைவலி

டெல்லி : தக்காளியை தொடர்ந்து கோதுமை விலையும் அதிகரித்து இருப்பது ஒன்றிய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மழை மற்றும் வரத்து குறைவால் தக்காளியின் விலை தங்கத்திற்கு போட்டியாக அதிகரித்து வருகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கோதுமையின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 10.8 கோடி டன் கோதுமை பயன்பாடு உள்ளது. ஆனால் உற்பத்தியில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இந்த ஆண்டு எதிர்பார்ப்பை விட அறுவடையில் 10% குறைந்துள்ளதால் கோதுமை வரத்து சந்தைகளில் குறைய தொடங்கி உள்ளது.

இனி வரும் மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் பதுக்கல்களும் தொடங்கிவிட்டன. இதன் காரணமாக சந்தையில் கோதுமை விலை எகிற தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு கோதுமை விலை உயர்ந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தோர் சந்தையில் மொத்த விலை கிலோவுக்கு 28 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. வட இந்திய மக்களின் முக்கிய உணவு பொருளான கோதுமை விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள மக்கள், கோதுமை விலையை கட்டுப்படுத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளன. விலை குறைய கோதுமை மீதான இறக்குமதி வரியை 40%ல் இருந்து குறைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு

மின்சார வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24X7 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு