ஈரோடு: தக்காளி பாரம் ஏற்றி வந்த டெம்போவில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தக்காளி பெட்டிகளை இறக்கிவிட்டு சாலையோரம் நிறுத்தி, ஓட்டுனர் மனோஜ்குமார் இருக்கையில் படுத்து உறங்கி உள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது வாகனத்திற்குள் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.