அதற்கு கார்த்திக் பணம் கொடுத்தால்தான் தக்காளி தருவேன் எனக்கூறியுள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜனார்த்தனன், கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த கார்த்திக் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையறிந்த தக்காளி வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று, கார்த்திக்கை தாக்கிய பாஜக பிரமுகரான ஜனார்த்தனனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மனு கொடுத்தனர்.அதன்பேரில் வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.