ஓசியில் தக்காளி தர மறுத்த வியாபாரியை தாக்கிய பாஜ நிர்வாகி: வாணியம்பாடியில் பரபரப்பு

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ரெட்டியூரைச் சேர்ந்தவர் கார்த்திக்(40), தக்காளி வியாபாரி. இவர் வாணியம்பாடியில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு நேற்று வழக்கம்போல் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பெருமாள்பேட்டையைச் சேர்ந்த பாஜக நகர இளைஞர் அணி தலைவரான ஜனார்த்தனன்(30) என்பவர் கார்த்திக்கிடம் இலவசமாக தக்காளி கேட்டுள்ளார்.

அதற்கு கார்த்திக் பணம் கொடுத்தால்தான் தக்காளி தருவேன் எனக்கூறியுள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜனார்த்தனன், கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த கார்த்திக் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையறிந்த தக்காளி வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று, கார்த்திக்கை தாக்கிய பாஜக பிரமுகரான ஜனார்த்தனனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மனு கொடுத்தனர்.அதன்பேரில் வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி