சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு காங்கிரஸ் முற்றுகை போராட்டம் நடத்தும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்ட நிலையில் வழக்கமான கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.