சென்னை : சுங்கச்சாவடிகளில் வசூலில் வரும் லாபங்கள் யாருக்கு செல்கின்றன? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பி உள்ளார். கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் மட்டும் ஆண்டுக்கு ரூ.9,000 கோடி வசூல், இந்தப் பணம் யாருக்கு செல்கிறது? என்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி போடும் அரசு ஏன் சுங்க கட்டணத்திற்கு ஜிஎஸ்டி போட மறுக்கிறது? என்றும் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.