சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பா.ஜ.க-வினர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் ராகுல் உரையின்போது நேற்று பாஜக-வினர் இடையூறு செய்தனர் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா தெரிவித்துள்ளார். சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பாஜக-வினர் என்று கோபண்ணா குற்றச்சாட்டியுள்ளார். நியாயமான கேள்விகளுக்கு மோடி அரசால் பதில் சொல்ல முடியவில்லை என கூறினார். அவைக்குறிப்பில் இருந்து ராகுல் பேச்சுகள் நீக்கப்பட்டுவிட்டதால் மட்டும் உண்மை மறைந்துவிடாது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் குற்றச்சாட்டியுள்ளார். ராகுல் காந்தியின் பேச்சுகள் நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பதவியேற்பதற்காக 4 நாட்கள் பரோல்!!

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது