புதுடெல்லி: டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்களிடையே உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அனைத்து எம்பிக்களுக்கும் கூட்டம் குறித்த அறிவிக்கப்பட்டுள்ளதோடு, கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.