Thursday, September 19, 2024
Home » இன்று மீலாது நபி: தலைவர்கள் வாழ்த்து

இன்று மீலாது நபி: தலைவர்கள் வாழ்த்து

by Karthik Yash

சென்னை: மீலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி: பெருமகனார் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று, அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நபிகள் நாயகத்தின் பொன்மொழிக்கேற்ப, நல்ல உள்ளத்தோடு, நற்செயல்களான, கருணை, பொறுமை, ஈகை, சகிப்பு தன்மை, மனித நேயம் ஆகியவற்றை கடைப்பிடிக்க அனைவரும் உறுதி ஏற்போம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: நபிகளின் வழியில் இன்னா செய்தாருக்கும் நன்னயமே செய்து விடுங்கள்; அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இருப் பதில் ஒரு பங்கை இல்லாதவர்களுக்கு கொடுத்து இன்பம் தேடுங்கள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: பல்வேறு அரும்பெரும் குணங்களின் கொள்கலனாக, கருவூலமாகத் திகழ்ந்த பெருமைக்குரிய அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நன்னாளில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு இனிய வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் சிறப்புக்களையும், போதனைகளையும் அனைவரும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். உள்ளமும், செயல்பாடும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழியை மனதில் வைத்து வாழ்ந்தால் அனைவரும் வாழ்வில் சிறக்கலாம்.
பாமக தலைவர் அன்புமணி: நபிகள் நாயகத்தின் வாழ்க்கை பாடத்தை படிப்பது மட்டுமின்றி, அதன்படியே அனைவரும் நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் ஒட்டுமொத்த உலகமும் அமைதி தவழும் அன்பு இல்லமாக மாறும்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்: நபிகள் நாயகம் பிறந்த இந்நன்னாளில் நாடு முழுவதும் அமைதி நிலவட்டும், சகோதரத்துவம் தழைத்தோங்கட்டும்.
இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபூபக்கர்: நபிகள் வழியில் நாம் நடந்தால் நாளும் நலமும் வளமும் சூழ்ந்து நிற்கும் என்பதை மனதில் நிறுத்துவோம். சாதி,மத பேதங்களை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் பயணித்து வளமான வசந்தமான வாழ்க்கையை வாழ்வோம்.

You may also like

Leave a Comment

nine − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi