புதுடெல்லி: காஷ்மீரில் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்களையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட கூட்டம் இன்று நடக்கிறது. இதில்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, சிஆர்பிஎப் உள்ளிட்ட துணை ராணுவத்தின் உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.