Tuesday, July 2, 2024
Home » இன்று 2ம் கட்ட தேர்தல் சட்டீஸ்கர் பாஜ வேட்பாளர் வாகனத்தில் ரூ.11 லட்சம் பறிமுதல்

இன்று 2ம் கட்ட தேர்தல் சட்டீஸ்கர் பாஜ வேட்பாளர் வாகனத்தில் ரூ.11 லட்சம் பறிமுதல்

by Karthik Yash

கோர்பா: சட்டீஸ்கர் மாநிலத்தில் இன்று தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பாஜ வேட்பாளரின் வாகனத்தில் இருந்து ரூ.11.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டீஸ்கரிலுள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் கோர்பா தொகுதியும் ஒன்று. கோர்பா தொகுதியில் பாலி தன்கர் கிராமத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ராம் தயாள் உய்கே பாஜ வேட்பாளராக போட்டியிடுகிறார். ராம் தயாள் உய்கேவின் வாகனத்தில் பணம் கொண்டு செல்லப்படுவதை அறிந்து அப்பகுதி மக்கள் அவரது காரை தடுத்து நிறுத்தி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.11.50 லட்சத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

sixteen − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi