தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டர்

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை வங்கியில் காலியாக உள்ள சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. System Administrator: 2 இடங்கள்.
2. NetWork Administrator: 2 இடங்கள்.
3. Information Security Specialist: 2 இடங்கள்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 25 லிருந்து 35க்குள்.

தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்பம்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் குறைந்தது 3 லிருந்து 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்சிஏ பட்டம் பெற்று அலுவலக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Information Security/System Security தொடர்பான சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tnscbank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2024.

Related posts

“3ஆம் பாலினத்தவர் என விண்ணப்பத்தை நிராகரிக்காதீர்” : ஐகோர்ட்

“தமிழர்களுக்கு எதிரான விதிகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி பேரணி