சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த நூலக மாநில பணிகள், சார்நிலை பணிகளில் அடங்கிய 4 காலி பணியிடங்களுக்கான (நேர்முக தேர்வு பதவி) கணினி வழி முதன்மை எழுத்து தேர்வை கடந்த மே மாதம் 13, 14ம் தேதிகளில் நடத்தியது. தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 22ம் தேதி நடைபெறும். ஒருங்கிணைந்த உதவி நிலவியலாளர் சார்நிலை பணிகளில் அடங்கிய 40 காலி பணியிடங்களுக்கு முதன்மை தேர்வில் 82 பேர் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 23ம் தேதி தேர்வு நடைபெறும்.