டிட்டோஜாக் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆசிரியர்களை வற்புறுத்தக்கூடாது: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: டிட்டோஜாக் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எந்த ஆசிரியையும் போராட்டக்குழு வற்புறுத்தக்கூடாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. டிட்டோஜாக் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் வழக்கம் போல் நடைபெற வேண்டும். எந்தவொரு பள்ளியும் ஆசிரியர்களின்றி இயங்காமல் இருக்கக்கூடாது. ஆசிரியர்களை போராட்டத்தில் பங்கேற்க வற்புறுத்துபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்