ரயில்வே பாதுகாப்பு படை டி.எஸ்.பி. செந்தில்குமரன் உத்தரவுப்படி உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற திருவொற்றியூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் திருவொற்றியூர் சரவணா நகரைச் சேர்ந்த விக்னேஷ் (23) என்பதும், எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீசியவர் என்பதும் தெரிந்தது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட விக்னேஷ், மறுநாள் கோர்ட்டில் ஆஜராகும்படி தாய் ருக்மணியிடம் ஒப்படைக்கப்பட்டார்.