திருவொற்றியூரில் ஏடிஎம் தீப்பிடித்து எரிந்தது

திருவெற்றியூர்: திருவொற்றியூரில் ஏடிஎம் தீப்பிடித்து எரிந்தது. சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இன்று அதிகாலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்தார். பின்னர் அவர் தனது கார்டை ஏடிஎம் மெஷினில் போட்டு பணம் எடுக்க முயன்றபோது திடீரென்று ஏடிஎம் எந்திரத்தில் பணம் வரும் பகுதியில் இருந்து பயங்கர சத்தத்துடன் கரும்புகை வந்ததால் அதிர்ச்சி அடைந்து அவர் வெளியே ஓடிவந்து அங்கிருந்த காவலாளியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் வந்தபோது ஏடிஎம் எந்திரத்தில் பற்றிய தீ அணைந்து விட்டது. மின் கோளாறு காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்