திருவாரூர்: திருவாரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.67.41 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. தனி நபர்கள் ஆக்கிரமித்திருந்த கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஐநூற்று பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமான 1,68,528 சதுர அடி ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டது.