Wednesday, July 3, 2024
Home » திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் ரேக்ளா போட்டி: அமைச்சர் எம்எல்ஏ பரிசு வழங்கினர்

திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் ரேக்ளா போட்டி: அமைச்சர் எம்எல்ஏ பரிசு வழங்கினர்

by Arun Kumar

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளியூர், ஆர்.ஆர்.கண்டிகையில் மாபெரும் ரேக்ளா எனப்படும் குதிரைப் பந்தயம் நடைபெற்றது. போட்டிக்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை சேர்மன் பர்கத்துல்லா கான், ஊராட்சி துணைத் தலைவர் முரளிகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் வேலு ஆகியோர் வரவேற்றனர். ரேக்ளா போட்டியை பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மாநில ஆதி திராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

இந்நிலையில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களின் விவரம் வருமாறு: சிறிய குதிரை போட்டியில், முதல் பரிசு – வெள்ளானூர் குண ராஜ், 2ம் பரிசு – திருவள்ளூர் முருகேசன், 3ம் பரிசு – திருவள்ளூர் எல்.டி.ரவி, 4ம் பரிசு – ஆடியோ விஜி. நடுக் குதிரை போட்டியில், முதல் பரிசு – திருவள்ளூர் பி.நந்தகுமார், 2ம் பரிசு – ஆவடி விக்கி, 3ம் பரிசு – சென்னை ராதா, 4ம் பரிசு – திருவள்ளூர் எல்.டி.ரவி. பெரிய குதிரை போட்டியில், முதல் பரிசு – சென்னை சரவணபவ, 2ம் பரிசு – பல்லாவரம் ராஜ், 3ம் பரிசு – சென்னை இக்பால், 4ம் பரிசு – ஒதிக்காடு கமலன். வெற்றிபெற்ற வீரர்களுக்கு அமைச்சர் சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர் விமல்வர்ஷன், ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி, மாவட்ட கவுன்சிலர் தென்னவன், ரேக்ளா குதிரைகள் நல சங்க தலைவர் ரவிந்திரபாபு, ஒன்றிய நிர்வாகிகள் மனோகரன், மதுரைவீரன், பிராங்கிளின், ஈக்காடு முகம்மது ரபீக், சங்கீதா சீனிவாசன், கிளை நிர்வாகிகள் கஜேந்திரன், சுரேஷ், ஏழுமலை, வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, முரளி உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

You may also like

Leave a Comment

4 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi