திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பு கட்டிடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமாக டாக்டர் நடேசன் சாலையில் உள்ள 3,424 சதுரடி பரப்பிலான கடைகள் மற்றும் குடியிருப்புகள் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்ததால், கோயில் துணை ஆணையர் நித்யா, உதவி ஆணையர் பாரதிராஜா முன்னிலையில் ஆக்கிரமிப்பு கடைகள் சீல் வைக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.6 கோடி.
அப்போது தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) திருவேங்கடம், சிறப்புப் பணி அலுவலர்கள் கொளஞ்சி, நித்யானந்தம், சுசில்குமார், ரமேஷ், ஆய்வாளர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்

வாக்காளர் பட்டியல் – நவம்பரில் சிறப்பு முகாம்

போதைப்பொருள் விற்பனை – மேலும் 5 பேர் கைது