திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு: வாகனங்களுக்கு தடை


திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிச.5ல் மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி நடந்து வரும் நிலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தி கோயில் ஊழியர்கள் பாதுகாப்புப் பணி செய்கின்றனர். திருத்தணி மலைப்பாதையில் மண் சரிவால் மலை அடிவாரத்திலேயே வாகனங்கள் நிறுத்தபட்டுள்ளதால் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு