பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் மோடி, ஜனவரி 19-ஆம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். திருப்பூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.