திருப்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழப்பு..!!

திருப்பூர்: திருப்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். இன்று காலை 5 மணி அளவில் திருப்பூர் காவிளிபாளையம் புதூர் பகுதியில் கட்டட பணி செய்வதற்காக திருவாரூர் மாவட்டம் கொடுவாசல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(28) சரவணபவன் என்ற மற்றொரு இளைஞர் என இருவர் வந்துள்ளனர்.

பணி செய்து வந்த நிலையில் இவர்கள் தண்டவாளத்தை கடந்து டீ குடிப்பதை வழக்கமாக வந்துள்ளனர். அதே போல் இன்று அதிகாலையும் டீ குடிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அவ்வழியாக கோவையிலிருந்து வந்த ரயில் ஒன்று மோதி இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தற்சமயம் அவர்களது உடலை கைப்பற்றியுள்ள ரயில்வே போலீசார் தொடர்ந்து அந்த பகுதியில் இது போன்று கடக்க முயலும் நபர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி இவர்கள் எத்தனை முறை இப்பகுதிக்கு வந்துள்ளனர் என்ற பல்வேறு விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இந்திய அணி வெற்றியை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்ட ‘Team India பாடல்: இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 115% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம்