பணி செய்து வந்த நிலையில் இவர்கள் தண்டவாளத்தை கடந்து டீ குடிப்பதை வழக்கமாக வந்துள்ளனர். அதே போல் இன்று அதிகாலையும் டீ குடிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அவ்வழியாக கோவையிலிருந்து வந்த ரயில் ஒன்று மோதி இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தற்சமயம் அவர்களது உடலை கைப்பற்றியுள்ள ரயில்வே போலீசார் தொடர்ந்து அந்த பகுதியில் இது போன்று கடக்க முயலும் நபர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி இவர்கள் எத்தனை முறை இப்பகுதிக்கு வந்துள்ளனர் என்ற பல்வேறு விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.