திருப்பூர்: பல்லடம் அருகே குன்னாங்கல்பாளையத்தில் புதிய சாய ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சாய ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200 வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தினர். சாய ஆலை அமைப்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.