திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல திட்டப்பணிகளை அமைச்சர் தொடகங்கி வைத்தார். ரூ.1,191 கோடியிலான குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.53.45 கோடி மதிப்பிலான புதிய பல்நோக்கு கூடம், ரூ.12.87 கோடி மதிப்பிலான புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.