கலப்படமான நெய் பயன்படுத்தப்பட்டதால் இன்று திருப்பதியில் தோஷ நிவாரண சாந்தி யோகம் நடத்தப்பட்டது. காலை 6 மணி முதல் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள் மற்றும் 3 ஆதவ ஆலோசகர்கள் தலைமையில் சாந்தி யாகம் நடத்தப்பட்டது. கோவிலின் தங்க கிணறு அருகே பழைய உண்டியல் காணிக்கை மண்டபத்தில் 3 யாக குண்டங்கள் அமைத்து இந்த யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் மூலவர் சன்னதி, லட்டு, அன்னபிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் தெளிக்கப்பட்டது. வழக்கமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தோஷங்களுக்கு பரிகாரமாக திருப்பதி கோவிலில் 3 நாட்கள் பவித்திர உற்சவம் நடத்தப்படும். தற்போது நெய் சர்ச்சையால் சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தப்பட்டது.