திருப்போரூரில் பேச்சு, ஓவிய போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

திருப்போரூர்: திருப்போரூர் நூலக வாசகர் வட்டம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் நடந்த பேச்சு, ஓவிய, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருப்போரூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் விஸ்நாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் தனஞ்செழியன் முன்னிலை வகித்தார். விழாவில், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகளில் அரசு, தனியார் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பாரதி வித்யாலயா பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியன், கனரா வங்கி மேலாளர் விஜயராகவன், அறுபடை வீடு பள்ளி முதல்வர் அந்தோணிராஜ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் லட்சுமி, ஞானசேகர், செந்தில்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு