திருக்கழுக்குன்றம்: திருப்போரூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு, சொந்தமாக பல ஏக்கர் நிலம் திருப்போரூர் மட்டுமல்லாது தண்டலம், பொன்மார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான இந்த நிலம் மற்றும் இடங்களை கோயில் நிர்வாகம் சார்பில் குத்தகை அடிப்படையில் தரமான ஏலம் கேட்பவர்களுக்கு விடுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு குத்தகைக்கான (திருப்போரூர் நிலம்) ஏலம் நேற்று கோயில் செயல் அலுவலர் குமரவேல் தலைமையில் ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 18 பேர் 43 ஏக்கர் நிலத்தை ஓராண்டிற்கான தொகை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி ஏலம் எடுத்தனர்.