சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயிலில் காணிக்கை உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் குமரவேல், ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்களால் 66 லட்சத்து 41 ஆயிரத்து 656 ரூபாய் ரொக்கம், 210 கிராம் தங்கம், 1962 கிராம் வெள்ளி ஆகியவை போடப்பட்டிருந்தது. இந்த பணியில் ஏராளமான பக்தர்கள், கோயில் ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.