திருப்போரூர் அருகே சோகம் கால்வாயில் விழுந்த ஓட்டுநர் பரிதாப பலி

திருப்போரூர்: திருப்போரூர் அருகே சாலையோர கால்வாயில் பைக்குடன் தவறி விழுந்த தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக பலியானார். திருப்போரூர் அய்யம்பேட்டை தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (36). தனியார் பொறியியல் கல்லூரில் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த இவர், தனது நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் கார்த்திக் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், ஆலந்தூர் அருகே சாலையோர கால்வாயில் பைக்குடன் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், வாலிபரின் சடலம் கிடப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்போரூர் பேபாலீசார், சடலத்தை மீட்டு பார்த்தபோது கார்த்திக் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார், நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு வருவதாக சென்ற கார்த்திக், பைக்குடன் கால்வாயில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்