பயணிகளுக்காக பேருந்து நிலையத்தில் காத்திருப்பு கூடம், நாற்காலிகள் உள்ளன. நீண்டநாட்களாக நாற்காலிகளின் கைப்பிடிகள், இருக்கைகள் உடைந்துகிடக்கின்றன. சிலவற்றில் நாற்காலிகளே இல்லாமல் வெறும் இரும்பு குழாய்கள் மட்டுமே உள்ளன. இதனால் திருப்போரூர் பேருந்து நிலையத்திற்கு குழந்தைகள் மற்றும் பைகளுடன் வரும் பயணிகள் உட்கார முடியாமல் நிற்கவேண்டிய நிலையுள்ளது. மேலும் காத்திருப்பு கூடத்தில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள் காத்திருப்பு கூடத்திற்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, பேருந்து நிலையத்தை பராமரித்து வரும் திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் காத்திருப்பு கூடத்தில் சேதமடைந்து காணப்படும் நாற்காலிகளை அகற்றிவிட்டு புதியது அமைக்கவேண்டும். பேருந்து நிலைய வளாகத்தில் மது அருந்தும் சமூக விரோதிகள் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்து பாதுகாக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.