இதையடுத்து, ஆலத்தூர் கிராம மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து இந்த ஏரியை நம்பி 600 ஏக்கர் விவசாய நிலங்கள் இருப்பதாகவும், 20 அடி ஆழத்திற்கு மண் அள்ளிச்சென்றால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடும் என்றும், இதனால் குடிநீருக்கு கூட கஷ்டப்படும் நிலை உருவாகும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இதையடுத்து, வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், மாவட்ட கலெக்டரிடம் உரிய உத்தரவு பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.