திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ரயில்வே மின்கம்பி மாற்றும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார். மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளர்கள் 4பேர் படுகாயமடைந்த நிலையில் துரந்த் என்பவர் உயிரிழந்தார். டிச.31ல் நடந்த விபத்தில் காயமடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.