திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்..!!

 

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காலணி தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவைகம் பகுதியில் தனியார் காலணி தொழிற்சாலையான மொஹிப் ஷூஸ் பிரைவேட் லிமிடெட் இயங்கி வருகிறது. இதில் சுமார் 750க்கும் மேற்பட்ட காலணி தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் ஊதியம் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய வைப்பு தொகையையும் வங்கியில் செலுத்தாமல் தொழிற்சாலை நிர்வாகம் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிவறைக்கு செல்லக்கூடிய இணைப்பை துண்டித்து விட்டதாகவும் தொழிற்சாலை நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி