சிவகங்கை: திருப்பத்தூரில் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010ல் திருப்பத்தூரில் உதவி நில அளவையராக பணிபுரிந்தபோது லஞ்சம் பெற்றதாக ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், 13 ஆண்டுகளுக்கு பின் நில அளவையர் ஆறுமுகத்துக்கு சிறை தண்டனை விதித்தது.