இதுகுறித்து விஜயவாடாவில் விரதம் இருந்து வரும் ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாணிடம் நேற்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘லட்டு பற்றி சிலர் காமெடி செய்கின்றனர். லட்டு சென்சிடிவ் விஷயம் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். இதற்கு கூட பதில் சொல்ல உங்களுக்கு தைரியம் இல்லையா?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு நடிகர் கார்த்தி பதிலளித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘டியர் பவன்கல்யாண்… உங்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. எதிர்பாராத வகையில் நடந்த தவறான புரிதலுக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வெங்கடேஸ்வராவின் பக்தன் என்ற முறையில் எப்போதும் நான் நம் மரபுகளை மதித்து நடக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பவன்கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில் மன்னிப்பு கேட்ட கார்த்திக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.