ஆனால் ஒய்.வி.சுப்பா ரெட்டி, கருணாகர் ரெட்டி தலைவராக இருந்த கால கட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கோவிந்தராஜ சுவாமி சத்திரங்கள் இடித்து புதுப்பிக்க மட்டும் சுமார் ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுவிம்ஸ் மருத்துவமனையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.77 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் நடந்த முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர்கள் ஒய்.வி சுப்பாரெட்டி மற்றும் கருணாகர் ரெட்டி, செயல் அதிகாரி தர்மா ரெட்டி, முதன்மை நிதி அதிகாரி பாலாஜி உள்ளிட்டோருக்கு மாநில விஜிலென்ஸ் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.