ஊர்வலத்தில் பக்தர்கள் கோலாட்டம், பஜனைகள் செய்தபடி பங்கேற்றனர். பின்னர் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட கொடியை கொடிமரத்தில் ஏற்றினர். இதனைதொடர்ந்து பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு வாகன மண்டபத்தில் இருந்து பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளிய மலையப்ப சுவாமியை முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் வழிபட்டனர்.
நேற்று ஏழு தலைகளுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்தில் இருந்த பழைய கயிற்றை கழற்றி புதியதாக கொடிமரத்தில் கயிறு கட்ட முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கொடி மரத்தின் உச்சியில் இருந்த இரும்பு வளையம் உடைந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.