திருப்பதி அருகே செம்மரக்கட்டை பறிமுதல்; 4 பேர் கைது

திருப்பதி: திருப்பதி அருகே செம்மர கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய தேடுதலில் 16 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜம்பேட்டை அருகே துணி கொண்டா வனப்பகுதியில் ரோந்து சென்றபோது செம்மர கடத்தல் கும்பல் தப்பி ஓடினர். தப்பி ஓடியவர்களில் 4 பேரை பிடித்து லாரியை சோதனை செய்தபோது, செம்மரம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டெயினர் லாரியில் இருந்து ரூ.80,000 ரொக்கம் மற்றும் 16 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 2023-24-ம் நிதி ஆண்டில் ரூ.81,875 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி மோசடி

விழுப்புரம் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? – காங்கிரஸ் தலைவர் கார்கே